| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 964 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 312... | க்குக் கடனே. |
| திணை: வாகை; துறை: மூதின் முல்லை. | |
| பொன்முடியார் பாடியது. | |
| 313 | அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ; உப்புஒய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
| திணை: அது; துறை: வல்லாண் முல்லை. (தும்பை) | |
| மாங்குடி கிழார் பாடியது. | |
| 314 | மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன் முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை, நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க் குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து நிறை அழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே - தன் இறை விழுமுறினே. |
| திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை) | |
| ஐயூர் முடவனார் பாடியது. | |
| 315 | உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி - இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போல, தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் கான்றுபடு கனைஎரி போல, தோன்றவும் வல்லன் - தான் தோன்றுங்காலே. |
| திணையும் துறையும் அவை. (தும்பை, வல்லாண்முல்லை) | |
| நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. | |
| 316 | கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, காட்டொடு மிடைந்த சீயா முன்றில், நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் இரும் புடைப் பழவாள் வைத்தனன்; இன்று இக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவதிலாளன் என்னாது, நீயும், வள்ளி மருங்குல் வயங்குஇழை அணிய, கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, சென்று வாய் சிவந்துமேல் வருக - சிறுகண் யானை வேந்து விழுமு |