புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   970
Zoom In NormalZoom Out

333
 
நீருள் பட்ட மாரிப் பேர்உறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ஊர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்,
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும்,
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென,
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்,
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர்
வேட்டக் குடிதொறும் கூட்டு
.............................................. உடும்புசெய்
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,
வம்புஅணி யானை வேந்து தலைவரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே.
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை)
 
.................................................................
 
334
 
காமரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு .......
. ...................... ன் ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊண்ஒலி அரவமொடு கைதூவாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .............................. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவுவேல் காளையும் கைதூவானே.
 
 
 
திணையும் துறையும் அவை. (வாகை, மூதின் முல்லை)
 
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
 
 
 
335
 
அடல் அருந் துப்பின்....................
...................குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு,
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன்,