புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   972
Zoom In NormalZoom Out

337...
 
வர்கொல் தாமே நேரிழை
உருத்த பலசுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்குவோரே?
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
கபிலர் பாடியது.
 
 
 
338
 
ஏர் பரந்த வயல், நீர்பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனை, பொன்மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பல்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங் கொண்டியளே; கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் - வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
 
 
 
339
 
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிட, கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக்குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடிந்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந்தழை துயல்வரும் செறு விறற..............
............................................................................லத்தி
வளர வேண்டும் அவளே, என்றும் -
ஆர்அமர் உழப்பதும் அமரியளாகி,
முறம்செவி யானை வேந்தர்
மறம்கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி)
 
..............................................................
 
340
 
அணித்த தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்
குரல்அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள்
....................... ல்என வினவுதி, கேள், நீ:
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை