| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 973 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
340... | கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும் பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
அ............................... பாடியது. | |
| | |
| 341 | வேந்துகுறை யுறவும் கொடாஅன், ஏந்துகோட்டு அம்பூந் தொடலை அணித்தழை அல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின் அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் .......................................................................................................... புலிக்கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு, மாற்றம் மாறான், மறலிய சினத்தன், 'பூக்கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல்இயல், சுணங்கு அணி வனமுலை, அவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ - ஆர்அமர் உழக்கிய மறம்கிளர் முன்பின், நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று - எனப் படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் களிறு பொரக் கலங்கிய தண்கயம் போல, பெருங்கவின் இழப்பது கொல்லோ, மென் புனல் வைப்பின் இத்தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
பரணர் பாடியது. | |
| | |
| 342 | கானக் காக்கை கலிச்சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணி, பெருந்தோட் குறுமகள், ஏனோர் மகள் கொல் இவள்? என விதுப்புற்று, என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை! திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே; பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை மென்சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், தண்பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், கழிபிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, வாள்தக வைகலும் உழக்கும் மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
அரிசில் கிழார் பாடியது. |