| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 976 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
| 349... | நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; இஃது இவர் படிவம்: ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கு ஆயின், தான் பிறந்த ஊர்க்கே. |
| திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
| மதுரை மருதன் இளநாகனார் பாடியது. | |
| 350 | தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? படுமழை உருமின் இரங்கு முரசின் கடுமான் வேந்தர் காலைவந்து, எம் நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ; பொருதாது அமைகுவர் அல்லர் - போர்உழந்து, அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், தொடிபிறழ் முன்கை, இளையோள் அணிநல் ஆகத்து அரும்பிய சுணங்கே. |
| திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
| மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது. | |
| 351 | படுமணி மருங்கின பணைத்தாள் யானையும், கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும், படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லென, கடல்கண்டு அன்ன கண்அகன் தானை வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும், வண்கை எயினன் வாகை அன்ன இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; என்ஆ வது கொல் தானே - தெண்நீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் ஊரே? |
| திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
| மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது. | |
| 352 | தேஎம் கொண்ட வெண்மண்டையான்; வீ...................................................................கறக்குந்து; அவல்வகுத்த பசுங்குடையான், புதல்முல்லைப் பூப்பறிக்குந்து; ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் குன்றுஏறிப் புனல்பாயின், புறவாயால் புனல்வள ............................................................ தொடைநறவின் மாவண் தித்தன் |