| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 977 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
353... | வெண்நெல் வேலி உறந்தை அன்ன உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளாஅனெ ...... .................ர்தந்த நாகுஇள வேங்கையின், கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும் சிறுகோல் உளையும் புரவிெ.................. ............................... யமரே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
பரணர் பாடியது. | |
| | |
| 353 | ஆசுஇல் கம்மியன் மாசுஅறப் புனைந்த பொலம்செய் பல்காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ, தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி, தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை வினவல் ஆனா வெல்போர் அண்ணல்! 'யார்மகள்?' என்போய்; கூறக் கேள், இனி: குன்றுகண்டு அன்ன நிலைப்பல் போர்பு நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு ......................................................................................................... ............................................. உழக்கிக் குருதி ஓட்டி, கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு, பஞ்சியும் களையாப் புண்ணர், அஞ்சுதகவு உடையர்இவள் தன்னை மாரே. |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது. | |
| | |
| 354 | அரைசுதலை வரினும் அடங்கல் ஆனான் நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தென தந்தையும் பெயர்க்கும்; வயல்அமர் கழனி வாயில் பொய்கை, கயல்ஆர் நாரை உகைத்த வாளை புனல்ஆடு மகளிர் வளமனை ஒய்யும் ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ - சுணங்குஅணிந்து எழிலிய அணந்து ஏந்து இளமுலை, வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கே |
|
திணையும் துறையும் அவை. (காஞ்சி, மகட்பாற் காஞ்சி) | |
|
பரணர் பாடியது. |