புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   978
Zoom In NormalZoom Out

355
 
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே:
.............................................................................
......................................................................
......................................................................
 
 
356
 
களரி பரந்து, கள்ளி போகி,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சுஅமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்நீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்,
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, காடுவாழ்த்து)
 
தாயங்கண்ணனார் பாடியது.