புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   979
Zoom In NormalZoom Out

357
 
குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட அன்றே யாண்டுகள்; துணையே
வைத்தது அன்றே வெறுக்கை; வி................
..........................................................................................ணை
புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
தொக்குஉயிர் வௌவும் காலை,
இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே.
 
 
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம். (காஞ்சி, காடுவாழ்த்து) பிரமனார் பாடியது.
 
 
 
358
 
பருதி சூழ்ந்த இப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட்டனரே காதலர்; அதனால்