புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   984
Zoom In NormalZoom Out

366...
 
தொறும் . . . . . . . . . .
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
 
 
திணையும் துறையும் அவை. (காஞ்சி, பெருங்காஞ்சி)
 
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
 
 
 
367
 
நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நார்அரி தேறல் மாந்தி, மகிழ்சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத் ‘தீப்‘ புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான்அறி அளவையோ இதுவே: வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்துஇயங்கு மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிக, நும் நாளே.
 
 
  திணை: பாடாண் திணை; துறை: வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த
உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
 
 
 
368
 
களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போல,
கைம்மா எல்லாம் கணைஇடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;
கடும்பரி நல்மான் வாங்குவயின் ஒல்கி,
நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவற் புரவி முகக்குவம் எனினே;
மெய்நிறைந்த வழுவொடு பெரும்பிறி தாகி,
வளிவழக்கு அறுத்த வங்கம் போல,
குருதிஅம் பெரும்