| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 994 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
![]()
|
381... | வது? புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், இருநிலம் கூலம் பாற, கோடை வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, சேயை ஆயினும், இவணை ஆயினும், இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! சிறுநனி, ஒருவழிப் படர்கஎன் றோனே எந்தை, ஒலிவெள் அருவி வேங்கட நாடன், உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான, மறப்புஇன்று, இருங்கோள் ஈராப் பூட்கை, கரும்ப னூரன் காதல் மகனே. |
|
திணையும் துறையும் அவை. (பாடாண் திணை, இயன்மொழி) | |
|
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது. | |
| | |
| 382 | கடற்படை அடல்கொண்டி, மண்டுற்ற மலிர்நோன்தாள், தண் சோழ நாட்டுப் பொருநன், அலங்குஉளை அணிஇவுளி நலங்கிள்ளி நசைப்பொருநரேம்; பிறர்ப்பாடிப் பெறல்வேண்டேம்; அவற்பாடுதும், 'அவன்தாள் வாழிய!' என; நெய்குய்ய ஊன்நவின்ற பல்சோற்றான், இன் சுவைய - நல்குரவின் பசித்துன்பின் நின் முன்னாள் விட்டமூதுஅறி சிறாஅரும் யானும், ஏழ்மணி, அம்கேழ், அணிஉத்தி, கண்கேள்வி, கவைநாவின், நிறன்உற்ற, அராஅப் போலும் வறன்ஒரீஇ - வழங்குவாய்ப்ப, விடுமதி அத்தை, கடுமான் தோன்றல்! நினதே, முந்நீர் உடுத்த இவ்வியன் உலகு, அறிய; எனதே, கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை கண்அகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல் ஏறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர் கேட்டொறும் நடுங்க, ஏத்துவென் வென்ற தேர் பிறர் வேத்தவை யானே. |
|
திணை அது; துறை: கடைநிலை. (பாடாண்திணை) | |
|
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது. | |
| | |
| 383 | ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்று எழுந்து, தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர், நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி, நெடுங்கடை நின்று, பகருபல வாழ்த்தி, தன்புகழ் ஏத்தினென்ஆக ஊன்புலந்து, அருங்கடி |