திருக்குறள்
ஓலை எண் :   27

Zoom In NormalZoom Out

கற்றறிவுடையராய்ச்     சொல்லுஞ்    சொல்லும்    இன்பமாகலின்,
பொதுப்படச்  ''சொல்''  என்றார்.  ''தீண்டல்'',  ''கேட்டல்''  என்னும்
காரணப்பெயர்கள்   ஈண்டுக்   காரியங்கள்மேல்   நின்றன. குழலினி
தியாழினி  தென்பதம்  மக்கள் மழலைச்சொல் கேளா தவர். குழலிசை
இனிது  யாழிசை  இனிது  என்று  சொல்லுவர்;  தம்  புதல்வருடைய
குதலைச்   சொற்களைக்   கேளாதவர்.   ''குழல்'',  ''யாழ்''  என்பன
ஆகுபெயர்.  கேட்டவர்  அவற்றினும்  மழலைச்சொல் இனிது என்பர்
என்பது   குறிப்பெச்சம்.  இனிமை  மிகுதிபற்றி  மழலைச்சொல்லைச்
சிறப்பு  வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப்
பயன்  கூறப்பட்டது.  தந்தை  மகற்காற்று  நன்றி அவையத்து முந்தி
இருப்பச்  செயல்.  தந்தை  புதல்வனுக்குச்  செய்யும்  நன்மையாவது;
கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன்
ஆக்குதல்.   பொருளுடையான்   ஆக்குதல்   முதலாயின   துன்பம்
பயத்தலின்  நன்மை  ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன்
கூறப்பட்டது. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்
கெல்லாம்   இனிது.  தம்  மக்களது  அறிவுடைமை;  பெரிய நிலத்து
மன்னா  நின்ற  உயிர்கட்கு  எல்லாம் தம்மினும் இனிது ஆம். ஈண்டு
''அறிவு''  என்றது  இயல்பாகிய  அறிவோடு  கூடிய  கல்வியறிவினை.
''மன்னுயிர்''   என்றது   ஈண்டு   அறிவுடையார்   மேல்   நின்றது.
அறிவுடைமை  கண்டு  இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான்
தந்தையினும்  அவையத்தார்  உவப்பர்  என்பது கூறப்பட்டது. ஈன்ற
பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.
தான் பெற்ற பொழுதை மகிழ