திருக்குறள்
ஓலை எண் :   29

Zoom In NormalZoom Out

சிலப்.16,71-73  என்பதனானும்,  அதனான்   ''அருள்பிறத்தல்  அருள்
என்னும்   அன்பு  ஈன்  குழவி''  குறள்.757  என்பதனாலும்  அறிக.
அன்பிற்கும்  உண்டோ  அடைக்குந்தாழ்  ஆர்வலர் புன்கணீர் பூசல்
தரும்.  அன்பிற்கும்  பிறர்  அறியாமல்  அடைத்து  வைக்கும்  தாழ்
உளதோ?;   தம்மால்  அன்பு  செய்யப்பட்டாரது  துன்பம்  கண்டுழி
அன்புடையார்   கண்பொழிகின்ற   புல்லிய   கண்ணீரே  உள்நின்ற
அன்பினை    எல்லாரும்    அறியத்தூற்றும்   ஆதலான்.  உம்மை
சிறப்பின்கண்    வந்தது.    ஆர்வலரது   புன்மை.   கண்ணீர்மேல்
ஏற்றப்பட்டது.    காட்சியளவைக்கு    எய்தாதாயினும்    அனுமான
அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை
கூறப்பட்டது. அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும்
உரியர் பிறர்க்கு. அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப்
பொருளானும்  தமக்கே உரியர்; அன்புடையார் அவற்றானே அன்றித்
தம்  உடம்பானும்  பிறர்க்கு  உரியர்.  ஆன்  உருபுகளும்  பிரிநிலை
ஏகாரமும்  விகாரத்தால்  தொக்கன.  ''என்பு''  ஆகு  பெயர். என்பும்
உரியராதல்  ''தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை
புக்கோன்''  புறநா.43  முதலாயினார்  கண்காண்க. அன்போ டியைந்த
வழக்கென்ப  ஆருயிர்க்கு  என்போ  டியைந்த  தொடர்பு. பெறுதற்கு
அரிய  மக்கள்  உயிர்க்கு  உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை;
அன்போடு  பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர்
அறிந்தோர். பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்