பட்டது. ''இயைந்த'' என்பது
உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு
இத்தொடர்ச்சி உளதாயிற்று
என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப்
பயன் அன்புடைமை என்றாயிற்று. அன்பீனும் ஆர்வம்
உடைமை அதுஈனும் நண்பென்னும்
நாடாச் சிறப்பு. ஒருவனுக்குத்
தொடர்புடையார் மாட்டுச்
செய்த அன்பு அத்தன்மையால்
பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அவ்விருப்பமுடைமைதான்.
அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை ''நாடாச்சிறப்பு'' என்றார். அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று
எய்தும் பேரின்பத்தினை. ''வழக்கு'' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம். அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; ஏனை மறத்திற்கும் அவ் |