திருக்குறள்
ஓலை எண் :   31

Zoom In NormalZoom Out

வன்பே  துணையாவது.  ஒருவன்  செய்த  பகைமைபற்றி  உள்ளத்து
மறம்   நிகழ்ந்துழி,   அவனை   நட்பாகக்   கருதி   அவன் மேல்
அன்புசெய்ய  அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம்
என்பார், ''மறத்திற்கும் அஃதே துணை'' என்றார், துன்பத்திற்கு யாரே
துணையாவார்  குறள் 1299என்புழிப்போல.  இவை ஐந்து பாட்டானும்
அன்பினது  சிறப்புக்  கூறப்பட்டது.  என்பி  லதனை வெயில்போலக்
காயுமே  அன்பி  லதனை  அறம்.  என்பு இல்லாத உடம்பை வெயில்
காய்ந்தாற்போலக்காயும்;    அன்பில்லாத    உயிரை   அறக்கடவுள்.
''என்பிலது''    என்றதனான்   உடம்பு   என்பதூஉம்   ''அன்பிலது''
என்றதனான்  உயிர்  என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும்
ஒருதன்மைத்து  ஆகிய  வெயிலின்முன்  என்பில்லது தன் இயல்பாற்
சென்று   கெடுமாறுபோல,   அத்தன்மைத்து  ஆகிய  அறத்தின்முன்
அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் காயும் என
வெயில்  அறங்களின்  மேல்  ஏற்றினார்,  அவற்றிற்கும் அவ்வியல்பு
உண்மையின்.  இவ்வாறு  ''அல்லவை  செய்வார்க்கு  அறம் கூற்றம்''
நான்மணி.83    எனப்    பிறரும்   கூறினார்.   அன்பகத்  தில்லா
உயிர்வாழ்க்கை    வன்பாற்கண்    வற்றல்    மரம்தளிர்த்   தற்று.
மனத்தின்கண்  அன்பு  இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;
வன்பாலின்கண்வற்றல்  ஆகிய  மரம்  தளிர்த்தாற்  போலும். கூடாது
என்பதாம்.  வன்பால்  -  வல்நிலம்.  வற்றல் என்பது பால் விளங்கா
அஃறிணைப் படர்க்கைப் பெயர். புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்
யாக்கை  அகத்துறுப்  பன்பி லவர்க்கு. யாக்கை அகத்தின்கண் நின்று
இல்லறத்திற்கு  உறுப்பாகிய  அன்புடையர்  அல்லாதார்க்கு;  ஏனைப்
புறத்தின்கண்  நின்று  உறுப்பாவன  எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண்
என்ன   உதவியைச்   செய்யும்.?   புறத்து  உறுப்பாவன:  இடனும்,
பொருளும், ஏவல் செய்வாரும் முத