திருக்குறள்
ஓலை எண் :   32

Zoom In NormalZoom Out

லாயின. துணையொடு  கூடாதவழி  அவற்றால்  பயன்  இன்மையின்
''எவன்   செய்யும்''   என்றார்.   உறுப்புப்   போறலின்   ''உறுப்பு''
எனப்பட்டன  ''யாக்கையின்  கண்  முதலிய  உறுப்புக்கள்  எல்லாம்
என்ன  பயனைச்  செய்யும்,  மனத்தின்கண்  உறுப்பு ஆகிய அன்பு
இல்லாதார்க்கு''  என்று  உரைப்பாரும்  உளர்.அதற்கு இல்லறத்தோடு
யாதும்   இயைபு  இல்லாமை  அறிக.  அன்பின்  வழிய  துயிர்நிலை
அஃதிலார்க்கு  என்புதோல் போர்த்த உடம்பு. அன்பு முதலாக அதன்
வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அவ்வன்பு இல்லாதார்க்கு
உளவான  உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர்
நின்றன  ஆகா.  இல்லறம்  பயவாமையின்,  அன்ன  ஆயின. இவை
நான்கு   பாட்டானும்   அன்பில்வழிப்படும்   குற்றம்  கூறப்பட்டது.
அஃதாவது,  இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார்
முதலிய   ஐம்புலத்துள்   முன்னைய  இரண்டும்  கட்புலனாகாதாரை
நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல்
அன்மையானும்,   இடைநின்ற   விருந்து  ஓம்பல்  சிறப்புடைத்தாய்
இல்லறங்கட்கு   முதல்   ஆயிற்று.   வேறாகாத  அன்புடை இருவர்
கூடியல்லது   செய்யப்படாமையின,   இஃது   அன்புடைமையின்பின்
வைக்கப்பட்டது.  இருந்தோம்பி  இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு. மனைவியோடு வனத்தில் செல்லாது
இல்லின்கண்   இருந்து  பொருள்களைப்  போற்றி  வாழும் செய்கை
எல்லாம்;   விருந்தினரைப்   பேணி   அவர்க்கு  உபகாரம் செய்தற்
பொருட்டு.    எனவே,   வேளாண்மை   செய்யாவழி   இல்லின்கண்
இருத்தலும்    பொருள்செய்தலும்    காரணமாக    வரும்   துன்பச்
செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம். விருந்து புறத்த