காலத்து இன்மையாவது
விருந்தோம்பலை இகழும் பேதைமை; அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக
உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம்
வேண்டும் என்பது கூறப்பட்டது. அஃதாவது,
மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு
இன்றியமையாதது
ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். இன்சொலாவன; அன்போடு கலந்து வஞ்சனை
இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை |