வெளிப்படுத்தல். படிறு
இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. ''இலவாம்
சொல்'' என இயையும். ''வாய்'' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது
அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது. அகனமர்ந் தீதலின் நன்றே -
முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். நெஞ்சு
உவந்து ஒருவற்கு வேண்டிய
பொருளைக் கொடுத்தலினும் நன்று;
கண்டபொழுதே முகம் இனியனாய்
அதனொடு இனிய சொல்லையும்
உடையனாகப் பெறின். இன்முகத்தோடு
கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், ''இன்சொலன் ஆகப் பெறின்'' என்றார். முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ''நோக்கி'' என்னும் வினையெச்சம் ''இன்சொல்'' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது. துன்புறூஉம்
துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடை |