மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4
Zoom In NormalZoom Out

குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என்.
 
பதிகம் முற்றிற்று.