மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   14
Zoom In NormalZoom Out

பேடுகாண் குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மைஅறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்
விழவுஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில்
பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய்அணி முச்சி
மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து
இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும்
விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி
அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள்
மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின்
நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள
வல்லுந கொல்லோ மடந்தை தன்நடை
மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன
சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன்
பைங்கிளி தாம்உள