| ந்நீர் இயங்குதிசை அறியாது யாங்கணும் ஓடி மயங்குகால் எடுத்த வங்கம் போலக் காழோர் கையற மேலோர் இன்றிப் பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக் கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்கு உறுத்துஆங்கு இருபால் பெயரிய உருகெழு மூதூர் ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக் கால வேகம் களிமயக்கு உற்றென விடுபரிக் குதிரையின் விரைந்துசென்று எய்திக் கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி அணித்தேர்த் தானையொடு அரசிளங் குமரன் மணித்தேர்க் கொடுஞ்சி கையால் பற்றிக் கார்அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங் கண்ணியில் சாற்றினன் வருவோன் நாடக மடந்தையர் நலங்கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண் சாளரம் பொளித்த கால் |