மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   17
Zoom In NormalZoom Out

ந்நீர்
இயங்குதிசை அறியாது யாங்கணும் ஓடி
மயங்குகால் எடுத்த வங்கம் போலக்
காழோர் கையற மேலோர் இன்றிப்
பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக்
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்கலக்கு உறுத்துஆங்கு
இருபால் பெயரிய உருகெழு மூதூர்
ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக்கு உற்றென
விடுபரிக் குதிரையின் விரைந்துசென்று எய்திக்
கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி
அணித்தேர்த் தானையொடு அரசிளங் குமரன்
மணித்தேர்க் கொடுஞ்சி கையால் பற்றிக்
கார்அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியில் சாற்றினன் வருவோன்
நாடக மடந்தையர் நலங்கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால்