மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   21
Zoom In NormalZoom Out

பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து
உருவி லாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச்
சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச்
சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன
எத்திறத் தாள்நின் இளங்கொடி உரைஎனக்
குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமன் கடந்த வாய்மையள் என்றே
தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்பச்
சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்
செவ்வியள் ஆயின்என் செவ்வியள் ஆகென
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம்செஞ் சாயல் அராந்தா ணத்துள்ஓர்
விஞ்சையன் இட்ட விளங்குஇழை என்றே
கல்என் பேரூர்ப் பல்லோர் உரையினை
ஆங்குஅவர் உறைவிடம் நீங்கி ஆயிழை
ஈங்குஇவள் தன்னோடு எய்தியது உரைஎன
வார்கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி
ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம்
வீங்