மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   23
Zoom In NormalZoom Out

சாற்ற
மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்
பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்
என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத்
தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி
சங்க தருமன் தான்எமக்கு அருளிய
எங்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள்
உலக நோன்பின் பலகதி உணர்ந்து
தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதிர் ஆழிதிறப்பட உருட்டிக்
காமன் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்
மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென
அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்
வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று
அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின்
பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக்
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்
கற்புத் தான்இலள் நல்