மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   25
Zoom In NormalZoom Out

முலை
ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி
ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய
ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி
குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக
எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
தன்உறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற
அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப்
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்பக்
கன்றுநினை குரல மன்றுவழிப் படர
அந்தி அந்தணர் செந்தீப் பேணப்
பைந்தொடி மகளிர் பலர்விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன்னரம் புளரக்
கோவலர் முல்லைக் குழல்மேல் கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிர்ஆற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி
வந்துஇறுத் தனளால் மாநகர் மருங்குஎன்.
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
முற்றிற்று.
அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்