| கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்அவிழ் பூம்பொழில் இடைஇடைச் சொரிய உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப் பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச் சுதமதி நல்லாள் தன்மதிமுகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்உற் றீர்என ஆங்குஅவள் ஆங்குஅவன் கூறியது உரைத்தலும் அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி அறத்தோர் வனம்என்று அகன்றறனன் ஆயினும் புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடுநவை எய்தாது அங்குநீர் போம்என்று அருந்தெய்வம் உரைப்ப வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அம்செஞ் சாயல் நீயும் அல்லது நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார் சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன மிக் |