| கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் ஈங்குஇதன் காரணம் என்னை யோஎன ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன் மாதவி மகளொடு வல்இருள் வரினும் நீகேள் என்றே நேர்இழை கூறும்இந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்காடு ஈங்குஇதன் அயலது ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும் நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத் துள்உரு எழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் நால்பெரு வாயிலும் பால்பட்டு ஓங்கிய காப்புஉடை இஞ்சிக் கடிவழங்கு ஆர்இடை உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப் பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில் காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும் அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆய ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்த |