மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   30
Zoom In NormalZoom Out

லி அரங்கத்து
மண்கணை முழவம் ஆக ஆங்குஓர்
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ விதழோ கவிரோ
பல்லோ முத்தோ வென்னா திரங்காது
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துக்
தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக்
கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி
விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்
கெம்மனை காணா யீமச் சுடலையின்
வெம்முது பேய்க்கென் னுயிர்கொடுத் தேனெனத்
தம்மனை தன்முன் விழ்ந்துமெய் வைத்தலும்
பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித்
தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை
யாருமி றமியே னென்பது நோக்கா
தாருயி ருண்ட தணங்கோ பேயோ
துறையு மன்றமுந் தொல்வலி மரனும்
உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய்
தகவிலை கொல்லோ சம்பா பதியென
மகன்மெய் யாக்கையை மார்புஉறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில்
கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்றக்
கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி
இடைஇருள் யாமத்து என்னைஈங்கு அழைத்தனை
என்உற் றனையோ எனக்குஉரை என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
ஆரும்இ லாட்டிஎன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ