| வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் களிப்புமாண் செல்வக் காவல் பேர்ஊர் ஒளித்துஉரு எய்தினும் உன்திறம் ஒளியாள் ஆங்குஅவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலஉள மாதவி தனக்குயான் வந்த வண்ணமும் ஏதம்இல் நெறிமகள் எய்திய வண்ணமும் உரையாய் நீஅவள் என்திறம் உணரும் திரைஇரும் பௌவத்துத் தெய்வம்ஒன்று உண்டுஎனக் கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னைஎன் நாமம் செய்த நல்நாள் நள்இருள் காமன் கையறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே நனவே போலக் கனவகத்து உரைத்தேன் ஈங்குஇவ் வண்ணம் ஆங்குஅவட்கு உரைஎன்று அந்தரத்து எழுந்துஆங்கு அருந்தெய்வம் போயபின் வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்துஆங்கு அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கு அரங்கியல் மகளிரில் கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை கொளைவல் ஆயமோடு இசைகூட் டுண்டு வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த |