மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   41
Zoom In NormalZoom Out

ணும் திரிவோள் பாங்கினம் காணாள்
குரல்தலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியில்
தாழ்துயர் உறுவோள் தந்தையை உள்ளி
எம்இதில் படுத்தும் வெவ்வினை உருப்பக்
கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து
வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து
ஐயா வோஎன்று அழுவோள் முன்னர்
விரிந்துஇலங்கு அவிர்ஒளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழுநிலம் அகன்று
விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது
பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை
பிறப்புவிளங்கு அவிர்ஒளி அறத்தகை ஆசனம்
கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ்செரு