மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   139
Zoom In NormalZoom Out

கையின
மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ்வகை அறிவது உயிரெனப் படுமே
வற்பம் ஆகி உறுநிலம் தாழ்ந்து
சொல்படு சீதத் தொடுசுவை உடைத்தாய்
இழின்என நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத்
தெறுதலும் மேல்சேர் இயல்பும் உடைத்தாம்
காற்று விலங்கி அசைத்தல் கடனிவை
வேற்றியல்பு எய்தும் விபரீ தத்தால்
ஆதி இல்லாப் பரமா ணுக்கள்
தீதுஉற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்துஒன்று ஒன்றில் புகுதா
முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா
ஒன்றிரண் டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்துதம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோல் செழுநில வரைப்பாம்
நிறைந்தஇவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரைகா லாய்உறும்
துன்றும்மிக் கதனால் பெ