மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   140
Zoom In NormalZoom Out

யர் சொலப் படுமே
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென் பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திட மாட்டா
ஓர்அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒருமயிர் அறியார்
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்
கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்றுஇவ் வாறு பிறப்பினும் மேவிப்
பண்புஉறு வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர்
கழிவெண் பிறப்பில் கலந்துவீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அதுஉறற் பாலார்
இதுசெம் போக்கின் இயல்புஇது தப்பும்
அதுமண் டலம்என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும்இடத்து எய்தலும் துக்கசுகம் உறுதலும்
பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும்அணு எனத்தகும்
முன்உள ஊழே பின்னும்உறு விப்பது
மற்கலி நூலின் வகைஇது என்னச்
சொல்தடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீஉரை நின்னால்
புகழும் தலைவன்யார் நூல்