மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   141
Zoom In NormalZoom Out

  
பொருள் யாவை
அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்புஎன விளம்பல் உறுவோன்
இந்திரர் தொழப்படும் இறைவன்எம் இறைவன்
தந்த நூல்பொருள் தன்மாத்தி காயமும்
அதன்மாத்தி காயமுங் காலா காயமும்
தீதுஇல் சீவனும் பரமா ணுக்களும்
நல்வினை யும்தீ வினையும்அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும்இத் திறத்த
ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும்
தோன்றுசார்வு ஒன்றின் தன்மைய தாயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்துஓர் கணத்தின் கண்ணே
தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்றுஅரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் அநித்தியம்
நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்
பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம்
இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்தி காயம் தான்எங்கும் உளதாய்ப்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித் தாகி யததன்மாத்தி காயமும்
எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்
காலம் கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும்ஆ காயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும்இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி