மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   142
Zoom In NormalZoom Out

த்
தாஇல்சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர்அணு புற்கலம் புறவுரு வாகும்
சீர்சால் நல்வினை தீவினை அவைசெயும்
வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
அருவினைப் பயன்அனு பவித்துஅறுத் திடுதல்
அதுவீடு ஆகும் என்றனன் அவன்பின்
இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன்
தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய்
மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச்
சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து
மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண்
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்
தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும்
ஆகா யத்தில் செவிஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்
தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய்
வாக்குப் பாணிபாத பாயுரு உபத்தம்என
ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த
பூத விகாரத் தால்மலை மரம்முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவைசென்று அட