மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   143
Zoom In NormalZoom Out

ங்கி
அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம்
அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப்
பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப்
எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி
அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய்
நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள
நிலநீர் தீவளி ஆகாயம்மே
மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே
உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே
வாக்குப் பாணிபாத பாயு ருபத்தம்
ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம்
உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச்
செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு
வைசே டிகநின் வழக்குஉரை என்னப்
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமா னியமும் விசேடமும் கூட்டமும்
ஆம்ஆறு கூறும் அதில்பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப்
பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான்
ஞாலம்நீர் தீவளி ஆகா யம்திசை
காலம் ஆன்மா மனம்இவற் றுள்நிலம்
ஒலிஊறு நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில்குணம் உடைத்து நின்ற நான்கும்
சுவைமுதல் ஒரோ