மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   146
Zoom In NormalZoom Out

றாமல் கந்தஉத் தியினால்
செறித்துஅரைப் போர்தம் செழுமனை நீரும்
என்றுஇந் நீரே எங்கும் பாய்தலில்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவுஒழி உடம்பின ஆகித்
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
பூமிசை பரந்து பொறிவண்டு ஆர்ப்ப
இந்திர தனுஎன இலங்குஅகழ் உடுத்து
வந்துஎறி பொறிகள் வகைமாண்பு உடைய
கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசுமிளை பரந்து பல்தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள்கிழிந் தன்ன
நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும்
கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக்
கடைகாப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும்
பல்மீன் விலைஞர் வெள்உப்புப் பகருநர்
கள்நொடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங்கோ வேட்களும்
செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும்
மரங்கொல் தச்சரும் மண்ணீட் டாளரும்
வரம்தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக் காரரும் காலக் கணிதரும்
நலம்தரும்