| அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து தினைத்தினை ஆயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் புரிந்த யான்இப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நல்நகர்ச் சேர்ந்தது கேளாய் குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்நாள் துப்புஅடு செவ்வாய்த் துடிஇடை யாரொடும் இப்பொழில் புகுந்துஆங்கு இருந்த எல்லையுள் இலங்கா தீவத்துச் சமன்ஒளி என்னும் சிலம்பினை எய்தி வலம்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகில் படலத்துக் ககனத்து இயங்குவோர் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின் புரையோர் தாமும்இப் பூம்பொழில் இழிந்து கல்தலத்து இருந்துழிக் காவலன் விரும்பி முன்தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்குஅவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவை யாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில் பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும் அறத்தகை முதல்வன் அருளி |