| சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம் போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது தென்மேற்காகத் தாதுஅணி பூம்பொழில் தான்சென்று எய்தலும் வையம் காவலன் தன்பால் சென்று கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன் கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலம் தீவில் தான்நனி மிக்கோள் அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு தங்காது இப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் மாமழை போல்என மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக் கந்திற் பாவை கட்டுரை எல்லாம் வாய்ஆ கின்றன வந்தித்து ஏத்தி ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்குஅவிழ் குழலார் கற்புக்குறை பட்டோ நலத்தகை நல்லாய் நல்நாடு எல்லாம் அலத்தல் காலை ஆகியது அறியேன் மயங்குவேன் முன்னர்ஓர் மாதெய்வம் தோன்றி உயங்காது ஒழிநின் உயர்தவத் தால்ஓர் காரிகை தோன்றும் அவள்பெருங் கடிஞையின் ஆர்உயிர் மருந்தால் அகல்நிலம் உய்யும் ஆங்குஅவள் அருளால் அமரர்கோன் ஏவலில் தாங்கா மாரியும் தான்நனி பொழியும் அந்நாள் இந்த அகநகர் புகுந்த பின்நாள் |