மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   153
Zoom In NormalZoom Out

நிகழும் பேர்அறம் பலவால்
கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது
பாரக விதியில் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்தது ஈங்குஎனப்
பொய்கையும் பொழிலும் புனைமின்என்று அறைந்ததுஅத்
தெய்வதம் போயபின் செய்துயாம் அமைத்தது
இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டுஉளம் சிறந்த காரிகை நல்லாள்
பண்டைஎம் பிறப்பினைப் பான்மையில் காட்டிய
அங்குஅப் பீடிகை இதுஎன அறவோன்
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத்
தீவ திலகையும் திருமணி மேகலா
மாபெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்றத்
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப்பிணி மருந்துஎனும்
அங்கையின் ஏந்திய அமுத சுரபியை
வைத்துநின்று எல்லா உயிரும் வருகெனப்
பைத்தரவு அல்குல் பாவைதன் கிளவியின்
மொய்த்த மூவறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால்முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசிநோய் உற்றோர்
மடிநல் கூர்ந்த மாக்கள்