மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   154
Zoom In NormalZoom Out

யாவரும்
பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும்
மன்உயிர் அடங்கலும் வந்துஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர்உயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியது என்னப் பெருவளம் சுரப்ப
வசித்தொழில் உதவி வளம்தந் ததுஎனப்
பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லுங் காலைத் தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண வடிகளும்
மல்லல் மூதூர் மன்உயிர் முதல்வி
நல்அறச் சாலை நண்ணினர் சேறலும்
சென்றுஅவர் தம்மைத் திருவடி வணங்கி
நன்றுஎன விரும்பி நல்அடி கழுவி
ஆசனத்து ஏற்றி அறுசுவை நால்வகைப்
போனகம் ஏந்திப் பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
வாய்வ தாகஎன் மனப்பாட்டு அறம்என
மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமே கலைஎன்.
கச்சி மாநகர் புக்க காதை முற்றிற்று.
இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம்திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென்வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன்மகள் பீலி