மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   155
Zoom In NormalZoom Out

வளைதான் பயந்த
புனிற்றுஇளங் குழவியைத் தீவகம் பொருந்தித்
தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்
வணங்கிக் கொண்டுஅவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது
அரைசற்கு உணர்த்தலும் அவன்அயர் வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின்உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த
மன்உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப்
பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்
துன்னியது என்னத் தொடுகடல் உழந்துழி
எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா
வழுவாச் சீலம் வாய்மையில் கொண்ட
பான்மையில் தனாது பாண்டு கம்பளம்
தான்நடுக்கு உற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளிநீர்ப் பரப்பின்
எவ்வம்உற் றான்தனது எவ்வம் தீர்எனப்
பவ்வத்து எடுத்துப் பாரமிதை முற்றவும்
அறஅரசு ஆளவும் அறவாழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்குஅவள்