மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   158
Zoom In NormalZoom Out

ச் சபக்கம் யாதொன்று உண்டுஅது
தோற்றரவு அடுக்கும் கைந்நெல்லி போல்எனல்
ஏற்ற விபக்கத்து உரைஎனல் ஆகும்
இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன
என்னைகா ரியம்புகை சாதித்தது என்னில்
புகைஉள இடத்து நெருப்புஉண்டு என்னும்
அன்னுவயத் தாலும் நெருப்புஇலா இடத்துப்
புகையில்லை என்னும் வெதிரேகத் தாலும்
புகைஇ நெருப்பைச் சாதித்தது என்னில்
நேரிய புகையில் நிகழ்ந்துஉண் டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின்
மேல்நோக் கிக்கறுத்து இருப்பபகைத்து இருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
 
 அன்னு வயம்சா திக்கின் முன்னும்
கழுதை யையும் கணிகை யையும்
தம்மில் ஒருகா லத்துஓர் இடத்தே
அன்னு வயம்கண் டான்பிற் காலத்துக்
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை
அனுமிக்க வேண்டும் அதுகூ டாநெருப்பு
இலாஇடத் துப்புகை இலைஎன நேர்அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னில்
நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரின்
நரிவாலும் இலையாகக் காணப் பட்ட
அதனையே கொண்டு பிறிதுஓர்