மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   163
Zoom In NormalZoom Out

  
ன்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத் துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப் படுதலின் என்றால்
அறியப் படுதல்நித் தாநித்தம் இரண்டுக்கும்
செறியும் கடம்போல் அநித்தத்து அறிவோ
ஆகாசம் போல நித்தத்து அறிவோ
என்னல் அசாதா ரணமா வதுதான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில்இன் றாதல்
சத்தம் நித்தம் கேட்கப் படுதலின்
என்னில் கேட்கப் படல்எனும் ஏதுப்
பக்கத் துள்ள தாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந் திகமாம்
சபக்கைக தேச விருத்தி விபக்க
வியாபி யாவது ஏதுச் சபக்கத்து
ஓரிடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்
தோன்றா தாகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகா சத்தினும் மின்னின்
நிகழ்ந்துஆ காசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கடாதியின் ஒத்தலில் கடம்போல்
அழிந்து செயலில் தோன்றுமோ மின்போல்
அழிந்து செயலில் தோன்றா தோஎனல்
விபக்கைக தேச விருத்தி சபக்க
வியாபி யாவது ஏது