மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   164
Zoom In NormalZoom Out

  
விபக்கத்து
ஓரிடத்து உற்றுச் சபக்கத்துஒத்து இயறல்
சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம்ஆ தலின்எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகா யத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்துஆ காசத்துக் காணாது
சபக்கக் கடாதிகள் தம்மில்
எங்குமாய் ஏகாந்தம் அல்ல மின்போல்
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல்
அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோஎனல்
உபயைக தேச விருத்தி ஏதுச்
சபக்கத் தினும்விபக் கத்தினும் ஆகி
ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத் தினுக்குச்
சபக்கஆ காச பரமா ணுக்களின்
ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம்
பரமா ணுவின்நிக ழாமை யானும்
விபக்க மான கடசுகா திகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும்
ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று
அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ
அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய்
விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின்
ஒத்த தெனினச் செயலி