மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   165
Zoom In NormalZoom Out

டைத் தோன்றற்குச்
சபக்கமாய் உள்ள கடாதி நிற்கச்
சத்தம் நித்தம் கேட்கப் படுதலில்
சத்தத் துவம்போல் எனச்சாற் றிடுதல்
இரண்டினும் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும்அத்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப் படுதலின் என்றால் பண்ணப்
படுவது அநித்தமா தலில்பண்ணப் பட்ட
ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட்டு
அநித்தம் சாதித்த லான்விப ரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச்சா தித்தல்
கண்முதல் ஓர்க்கும் இந்திரி யங்கள்
எண்ணில் பரார்த்தம் தொக்குநிற் றலினால்
சயனா சனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்
சயனா சனத்தின் பரார்த்தம்போல் கண்முதல்
இந்தியங் களையும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயனா சனவா னைப்போல் ஆகிக்
கண்மு