மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   166
Zoom In NormalZoom Out

  
தல் இந்தியத் துக்கும் பரனாய்ச்
சாதிக் கிறநிர அவயவமாய் உள்ள
ஆன்மா வைச்சா வயவ மாகச்
சாதித் துச்சாத் தியதன் மத்தின்
விசேடம் கெடுத்த லின்விப ரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி உடைய சொருபமாத் திரத்தினை
ஏதுத் தானே விபரீதப் படுத்தல்
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்றுஎத் திரவியம் ஆம்எக்
குணகன் மத்துஉண் மைவே றாதலால்
சாமா னியவிசே டம்போல் என்றால்
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்
நின்றவற் றின்இடை உண்மைவே றாதலால் என்று
காட்டப் பட்ட ஏது மூன்றினுடை
உண்மை வேறு படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லா மையினும்
திட்டாந் தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதுஒன்று இல்லாமை யானும்
பாவம் என்று பகர்ந்ததன் மியினை
அபாவம் ஆக்குத லான்விப ரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்
முன்னம் காட்டப் பட்ட ஏதுவே
பாவமா கின்றது கருத்தா வுடைய
கிரியையும் குணமும்ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலால் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபா