மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   172
Zoom In NormalZoom Out

  
சாத்தியம்
இல்லா விடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப் படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப் படுவது அல்லா ததுவும்
அன்றுஎனும் இவ்வெதி ரேகம் தெரியச்
சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரே கம்தெரி யாது
விபரீத வெதிரேகம் ஆவது
பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லைஅவ்
விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லைஅவ்
விடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறு கொள்ளும்எனக் கொள்க
நாட்டிய இப்படித் தீயசா தனத்தால்
காட்டும் அனுமான ஆபா சத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்துஎன்.
தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று.