மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   173
Zoom In NormalZoom Out

 
முப்பதாவது
 

பவத்திமறுகெனப்பாவை நோற்றபாட்டு)
தானம் தாங்கிச் சீலந் தலைநின்று
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
புத்த தன்ம சங்கம் என்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
சரணா கதியாய்ச் சரண்சென்று அடைந்தபின்
முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து
முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத்
துடித லோகம் ஒழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி இருந்து
மாரனை வென்று வீரன் ஆகிக்
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
இறந்த காலத்து எண்ணில்புத் தர்களும்
சிறந்துஅருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளின் ஈந்தநெறி உடைத்தாய்ச்
சார்பின் தோன்றித் தத்தமில் மீட்டும்
இலக்கணத் தொடர்தலின்
மண்டில வகையாய் அறியக் காட்டி
எதிர்முறை ஒப்ப மீட்சியும் ஆகி
ஈங்குஇது இல்லா வழிஇல் லாகி