மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   176
Zoom In NormalZoom Out

தோன்றுவர்
நல்வினை என்பது யாதுஎன வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
உணர்வுஎனப் படுவது உறங்குவோர் உணர்வின்
புரிவுஇன்று ஆகிப் புலன்கொளா ததுவே
அருவுரு என்பதுஅவ் வுணர்வு சார்ந்த
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
வாயில் ஆறும் ஆயும் காலை
உள்ளம் உறுவிக்க உறும்இடன் ஆகும்
ஊறுஎன உரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை மேவுதல் என்ப
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
வேட்கை விரும்பி நுகர்ச்சிஆ
தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல்
பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின்
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்
பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய்
இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல்
மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும்
தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல்
சாக்காடு என்பது