மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   182
Zoom In NormalZoom Out

ஒன்றிய காரணம் உதவுகா ரியத்தைத்
தருதற்கு உள்ளம் தான்இலை என்றல்
புரிவின்மை நயம்எனப் புகறல் வேண்டும்
நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றும்எனல்
நல்ல இயல்புநயம் இவற்றில்நாம் கொள்பயன்
தொக்க பொருள்அலது ஒன்றுஇல்லை என்றும்
அப்பொருள் இடைப்பற்று ஆகாது என்றும்
செய்வா னொடுகோட் பாடுஇலை என்றும்
எய்துகா ரணத்தால் காரியம் என்றும்
அதுவும் அன்றுஅது அலாததும் அன்றுஎன்றும்
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
வினாவிடை நான்குஉள
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமைஎனத்
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
கேடுஉண்டு என்றல் துணிந்துசொலல் ஆகும்
செத்தான் பிறப்பா னோபிற வானோ
என்று செப்பின்
பற்றுஇறந் தானோ அன்மக னோஎனல்
மிகக்கூ றிட்டு மொழிதல்என விளம்புவர்
வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
பனைமுந் திற்