| றோ எனக்கட் டுரைசெய் என்றால் எம்முட்டைக்கு எப்பனை என்றல் வாய்வா ளாமை ஆகா யப்பூப் பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் கட்டும் வீடு அதன்கா ரணத்தது ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம் அநித்தம் துக்கம் அநான்மா அசுசிஎனத் தனித்துப் பார்த்துப் பற்றுஅறுத் திடுதல் மைத்திரி கருணா முதிதைஎன்று அறிந்து திருந்துநல் உணர்வால் செற்றம்அற் றிடுக சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி உய்த்து மயக்கம் கடிக இந்நால் வகையால் மனத்துஇருள் நீங்குஎன்று முன்பின் மலையா மங்கல மொழியின் ஞான தீபம் நன்கனம் காட்ட, தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவைநோற்றனள்என். பவத்திறம் அறுக எனப் காதைமுற்றிற்று. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை முற்றிற்று.. |