மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   188
Zoom In NormalZoom Out

விசும்பின் ஆகாய கங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வாஎனப்
பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு
அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள்
நின்னால் வணங்கும் தன்மையள் வணங்குஎனப்
பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி
கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர்
நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன
இருபால் பெயரிய